அரசாங்கத்தால் ஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியாதா?
அரசாங்கத்தால் ஏழ்மையை அடியோடு ஒழிக்க முடியும். முழு அதிகாரம் இருந்தும் முயற்சி இல்லை ஏழைகளின் வாழ்க்கை முன்னேறாமல் இருப்பதற்கு, பெரும் காரணமே, அரசாங்கம் தான். பொருளாதாரத்தை முழுவதுமாக தனது கட்டுக்குள் வைத்துள்ள அரசாங்கம், அதாவது பொருளாதாரத்திற்கு தேவையான பண வெளியிடும் தனி உரிமை, பொருளாதார கொள்கைகள், பொருளாதார சட்டங்கள், பட்ஜெட் நெறிமுறைகள், பொருளாதார திட்டங்கள், வங்கிக் கடன்களை கட்டுப்படுத்தும் அதிகாரம், மற்றும் வட்டி விகிதத்தை நிர்ணயிப்பது என பொருளாதாரம் சார்ந்த அனைத்தையும் வடிவமைக்கும் முழு அதிகாரம் கொண்ட அரசாங்கம் , மக்களது வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு தேவையான அனைத்து அதிகாரங்களையும், வளங்களையும் தன்னிடத்தே கொண்டது. ஏழைகளின் வாழ்க்கையை முன்னேற்ற நோக்கமோ, முயற்சியோ, விருப்பமோ இல்லாததால் தான், அதற்கான எந்தவித திட்டமிடலும் இல்லை. முனைப்பும், திட்டமிடலும் இருந்தால், முன்னேற்ற முடியும் சாலை, மற்றும் போக்குவரத்து வசதிகள், தொழில் வளர்ச்சி, தொழிற்கூடங்களின், தொழிலாளர்களின் எண்ணிக்கை, பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை, சமூக, பொருளாதார வளர்ச்சி, கல்வி, மருத்துவம் என்று அனைத்...